எம் தேசத்தில் நடந்தேறிய துயரத்தை திரையில் கொண்டு வந்தமைக்கு திரைக்குழுவினருக்கு ரொம்ப நன்றி. படம் பார்ப்பதற்கு முன் நான் நினைத்தேன் அவ்வாறன ஒரு அவலத்தை எவ்வாறு திரையில் கொண்டு வருவது சாத்தியம் என்று. ஆனால் படம் மிகவும் தத்துருவமாக, யதார்த்தமாக, எதுவும் மிகைப்படுத்த படாமல் உருவாக்க பட்டுள்ளது. நடிப்பு,பாடல்கள்,இயக்கம், ஒலிப்பதிவு அனைத்தும் அருமை. இயக்குநருக்கு இது முதல் படம் போன்று தெரியவில்லை.பல படங்கள் இயக்கிய அனுபவம்போல் இருக்கிறது. Dr வரதன் அண்ணா நடிப்பு என்று சொல்வதை விட அந்த பாத்திரமாகவே வாழ்ந்துஉள்ளார். பொய்யா விளக்கு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற படங்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்.